Sunday, January 20, 2008

புண்ணிய நதிகள் - ஸரஸ்வதி

புஷ்கரம் என்னும் ஏரியிலிருந்து உற்பத்தியாகி லூனி என்னும் நதியுடன் கலக்கிறது. ஹிமாலயத்தில் சிவாலிக்கில் உற்பத்தியான ஸரஸ்வதி நதி விநாசன என்ற இடத்தில் மறைந்து மீண்டும் புஷ்கரத்தில் உண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது. ஸரஸ்வதி நதிதான் படாபாக்னியை மேற்கு சமுத்திரத்திற்கு தூக்கி சுமந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரிக்வேதத்தில் இந்த நதி பலவாறு வர்ணிக்கபட்டுள்ளது. ரிக் வேதத்தின் 'நாடிஸ் ஸ்துதி ஸூக்தம்' (6.61,7.95 மற்றும் 7.96) இந்நதியை மேற்கே சட்லஜ் நதிக்கும், கிழக்கில் யமுனை நதிக்கும் நடுவில் அந்தர்வாகினியாகச் செல்கிறதாகக் கூறுகிறது. ரிக்வேதத்தில் ஸரஸ்வதி நதி ஏறக்குறைய 72 இடங்களில் கூறப்படுகிறது. 'ஸப்த சிந்து' என்று அறியப்படும் ரிக்வேத கால ஏழு நதிகளில் ஸரஸ்வதி தலையான நதியாக அறியப் பெற்றுள்ளது. பிற்கால வேதநூல்களாகிய 'தான்ட்யா', 'ஜைமின்னியா' மற்றும் மஹாபாரதம் இந்நதி பாலைவனத்தில் மறைந்ததாகக் கூறுகின்றன. ப்ரயாக் (அஹமதாபாத்) நகரில் ஸரஸ்வதி அந்தர்வாகினியாகிய கங்கை, யமுனையுடன் கலக்கிறது. இது 'த்ரிவேணி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.