Wednesday, January 9, 2008

புண்ணிய நதிகள் - சோனா நதி

வட இந்தியாவில் அமரகண்டகம் என்கிறபடி பூமியில் உற்பத்தியாகும் சோனா நதி கங்கை நதிக்கு ஒரு முக்கிய உபநதி. இங்கேயே தான் நர்மதா நதியும் உற்பத்தியாகிறது. அமரகண்டகம் ஒரு புண்யஸ்தலம். ச்ரார்தம் செய்ய வேண்டிய இடமும் கூட. சோனா நதி பாட்னா அருகே கங்கையை சேருகிறது. சரயு நதியும், சோனா நதியும் எதிரெதிராக கங்கையில் கலக்கின்றன. இந்த நதியை சோணபத்ரா என்றும் கூறுவர். இது நதம் (masculine gender) என்றும் கூறப்படுகிறது. இக்கரையில் சந்தியா உபாஸனை செய்தல் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் போக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மனது இரு கண்ணீர் துளிகள் நர்மதையாகவும், சோனா நதியாகவும் அமரகண்ட மலையிலிருந்து உற்பத்தியாயின என்பது கூறப்பட்டுள்ளது.

ராம, லக்ஷ்மணர்களை விஸ்வாமித்ர முனிவர் இந்த நதியை கடந்ததாய் ராமாயணம் கூறும். புண்ணிய நதியான சோனா நதியின் இன்னோரு பெயர் 'சுமகதி'. இந்த காரணத்தால் இந்நதி பாயும் இப்பிரதேசம் 'மகதம்' என்றும் அறியப் பெறும். பிற்கால பிரபல மகத சாம்ராஜ்ஜியம் இந்நதியினைச் சுற்றியே ஸ்தாபிக்கப் பெற்றது. இந்நதி கிழக்கிலிருந்து, மேற்காக இங்கிருக்கும் மலைகளுக்கு ஒரு மல்லிகை மாலையைப் சூட்டியது போல ஓடுகிறது.

No comments: